இந்தியா வந்து சேர்ந்தது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா

ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் தளத்திற்கு ஜனவரி 7ல் வந்து சேர்ந்தது.

 

ரஷியாவிடம் இருந்து ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலை வாங்குவதற்காக, 2004 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் இந்தியா உடன்பாடு செய்து கொண்டது. அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதன் விலை 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

 

ஏற்கெனவே இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். வீராட் என்னும் விமானந்தாங்கி போர் கப்பல் உள்ளது. அத்துடன் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலும் இணைந்தால் இந்திய கடற்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

 

For more details please visit http://www.suracoaching.com/news_events.php?id=77

Leave a comment