நடப்பு நிதி ஆண்டின் (2013-14) முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர்) மத்திய அரசின் மறைமுக வரிவசூல் சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 6.2 சதவீதம் மட்டும் அதிகரித்து ரூ. 3, 55, 003 கோடியாக உயர்ந்துள்ளது.
கலால் வரி: சென்ற 2012-13 ஆம் நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் ரூ. 4.73 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு 2013-14 ஆம் நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் வாயிலாக ரூ. 5.65 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. முதல் ஒன்பது மாதங்களில் வசூலான தொகை இதில் 63 சதவீத அளவிற்கே உள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டிற்கான இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
For more details please visit http://www.suracoaching.com/news_events.php?id=85