வளர்ச்சிப் பாதையில் இந்தியா; நம்பிக்கை இழக்க வேண்டாம்! வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ’பிரவாசி பாரதிய திவஸ்12-ஆவது மாநாடு தில்லியில் ஜனவரி 8ந் தேதி தொடங்கியது. மாநாட்டில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடக்கிவைத்து பிரதமர் மன்மோகன் பேசியதாவது: விலைமதிப்பற்ற பங்களிப்பு: இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளி இந்தியர்களும் அளித்து வரும் பங்களிப்பு விலைமதிப்பற்றது. இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியைக் சேர்ந்த இளம் தலைமுறையினர் பெருமளவில் மாநாட்டில் பங்கேற்றுள்ளது வரவேற்புக்குரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஒளிரும் இந்தியா மீது உலக நாடுகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ளன. அதை உணர்ந்து சர்வதேச அமைப்புகளில் முக்கியப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகி வருகிறது. அந்த நோக்கத்துடன் வெளிநாடுவாழ் இந்திய சமூகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவை இனி வரும் காலத்தில் மிகவும் ஆழமாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். |